July 1, 2016

அடுத்து என்ன நடக்கும் ஜோதிடரின் அதிரடி தகவல்! ஆட்டங் காணும் சிறிலங்கா!

சிறிலங்காவில் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் ஆணை இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிறது.


இவ்வாறான சூழ்நிலையில் ஜோதிடத்தை நம்பி பலர் ஆட்சியை இழந்தாலும், சிலர் அதிகார கதிரையை கைப்பற்றியும் உள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்து பல்வேறு ஜோதிடர்கள் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரும் காலத்தில் சிறிலங்காவில் புதிய அரசியல் சக்தி ஒன்று உருவாகினால் அது தேசியவாத ரூபத்தில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமையும் என பிரபல ஜோதிடர் யோகீ சுஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் நிலைமை தொடர்பில் ஆரூடம் கூறும் வகையில் யோகியினால் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் ஊடாக குறித்த பிரதான அரசியல் கட்சிகளில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி கடுமையான வீழ்ச்சிக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் மூலம் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி ஆயத்தமாக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளரின் ஆரூடத்தை முழுமையான கற்றவன் என்ற ரீதியில், அவருக்கு ஏற்பட்ட கெட்ட நேரமே, கடந்த காலங்களில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட ஆபத்தகளுக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகுவதன் ஊடாக அரசியல் துறையில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் அதிகமாக காணப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சியில் செயற்படுவார், தற்போதைய ஆட்சியில் இருப்பவர்களும் தொடர்ந்து செயற்படுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடல் நலத்தில் கவனம் எடுத்து மீண்டும் புதிய கட்சியை ஆரம்பித்து அதிகாரத்திற்கு வந்தால், ஐக்கிய தேசிய கட்சிக்கு கடும் சவாலான ஒரு சக்தியாக அந்த கட்சி மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியில் இணைந்திருந்தவர்களும் இந்த கட்சியுடன் இணைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க முயன்று வருகின்றனர். இதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment