June 25, 2016

இளம் பெண் பொறியியலாளர் கொலை குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண் பொறியாளர் ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் இன்று வெட்டி கொலை செய்துள்ளார்.

பயணிகள் மத்தியில் நடந்த இக்கொலை சம்பவத்தால் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கெமராக்கள் இல்லாத காரணத்தினால் குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும், ரயில்நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த காணொளி பதிவுகளை கொண்டு கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment