June 25, 2016

தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ள இலங்கையர் உள்ளிட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது!

தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த இலங்கையர் உள்ளிட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த 21ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் இந்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இந்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

38 வயதான உசான் பெர்னாட் கருணாரட்ன என்ற இலங்கையரே இவ்hறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்டர் போலினால் தேடப்பட்டு வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment