May 29, 2016

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! - சம்பந்தன் !

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடை முறைப் படுத்தப்பட வேண்டும் என்று   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் தவறான புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இதனை விடுத்து ஜெனிவா தீர்மானத்தை தளர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment