May 31, 2016

4 கோடி பெறுதியான கேரள கஞ்சா கைப்பற்றல்!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4கோடி பெறுமதியான 100 கிலோ கேரளா கஞ்சாவை கல்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


குறித்த கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்த கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாகவும், இன்று அதிகாலை கல்பிட்டி கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் கலால் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கஞ்சா வியாபாரமானது நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவசர சுற்றிவளைப்பின் கலால் பிரிவினர் அதிகாரி ஏ.ஆர்.லெம்பர்ட் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment