May 30, 2016

ஊடகவியலாளர் நடேசனின் 12 ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை!

2004 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12 ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வு மட்டக்களப்பில்
இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெற்றது.

 
வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஆதரவுடன் மட்டக்களப்பு, பிள்ளையாரடி மன்றேசா வீதியிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் கட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது ஐயாத்துரை நடேசனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தி, சுடரேற்றி வைக்கப்பட்டது.

நடேசன், நெல்லை நடேசன் என பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின், 12 ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் அரசியல் தரப்பு நண்பர்கள், புத்திஜீவிகள் எனப் பலர் உரையாற்றினர்.





No comments:

Post a Comment