May 25, 2016

நாட்டில் சீரற்ற காலநிலை!! பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலி!

இயற்கை அனர்த்தத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியாகியுள்ளதுடன் 11 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையில், சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தம் காரணமாக கேகாலை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட மக்களை கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன.

அவற்றுள் 10 பாடசாலைகள் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment