September 5, 2015

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவுளொடு இலட்சியம் நோக்கிப் பயணிப்போம் - சுவிஸ் ஈழத்தமிழரவை! (படம் இணைப்பு)

உலக வல்லாதிக்கங்களுடன் இணைந்து சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப்படுகொலையை கண்டித்தும், எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரியும் உலக மாந்தநேயம் போற்றும் ஐ நா
சபைமுன்றலில் 05-09-2013 அன்று தனது இன்னுயிரை அக்கினியில் தியாகம் செய்த எம் தேசப்புதல்வன் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பு உலக தமிழ்ர்களை எல்லாம் மீண்டும் எழுச்சி கொள்ள வைத்தது.

18-05-2009 இற்கு பின்னர் எல்லாம் முடிந்துவிட்டது என்று சிங்கள இனவாதிகள் கொக்கரித்த வேளையில் அவை அனைத்தையும் பொய்யாக்கி தனது உடலில் அக்கினியை அனைத்துக்கொண்டு போராட்டத்தின் எழுச்சியை  மக்கள் மனதில் விதைத்துச் சென்றுள்ளார் ஈகைப்ரொளி செந்தில்குமரன்.

இவரின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தியாகம். எமது கடமைகளை மறக்கும் போதெல்லாம் நினைவூட்டும் தியாகம். எமது போராட்டத்துக்கு  உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான அர்ப்பணிப்பை தமிழர் வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளார் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்.

இவரின் வீரம்  உறுதியாகி எதிர்காலத்தில் இன்னும் வலிமையான வரலாறாக மாறும.தமிழீழத்தை அடையும் வரையும், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்கும் வரையும் நாம் ஒயமாட்டோம் என்ற முழக்கத்துடன் எதிர்வரும் 21-09-2015 அன்று ஐ நா சபை முன்றலில் செந்தில்குமன் தீமூட்டிய திடலில்  அலைகடலெனத் திரண்டு உலகத்தார் செவிப்பறைகள் அதிர அட்பரிப்;போம்.

சுவிஸ் ஈழத்தமிழரவை

No comments:

Post a Comment