September 29, 2015

கொக்குவில் பகுதியில் வாள்களுடன் ரவுடிக் கும்பல் கைது! (படங்கள் இணைப்பு)

கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று திங்கட்கிழமை வசமாக மாட்டிக்கொண்டது. இவர்கள் கொக்குவில் பகுதியில் அண்மையில்
இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார்

தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தக் குழுவின் 5 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியில் இருந்து ஆபாசப் படங்கள், பாடசாலை மாணவிகளின் புகைப்படங்கள் என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களின் இவர்கள் செல்கின்றனர் எனக் கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் துரிதமாக செயற்பட்ட பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கொக்குவில், இணுவில், தாவடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. இக்குழுவில் கைதுசெயப்பட்ட ஒருவர் யாழ். நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் எந்தவித ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment