September 13, 2015

மட்டக்களப்பில் கடும் வரட்சி: நீர் வற்றிய நிலையில் குளங்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல்
தெரிவித்தார். இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.அவற்றுள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் 5 குளங்களும் ஏனைய இடங்களிலும் 9 குளங்களும் உள்ளன. இவற்றில் மதுரங்கேணி பெரிய குளம், மகிழடித்தீவு குளம்,பழுகாமம் குளம், சேவகப்பற்று குளம், போரதீவு குளம் மற்றும் மகிழூர் குளம் ஆகிய குளங்கள் முற்றாக வற்றிவிட்டன. கடுக்காமுளை குளம் தற்போது 5 அடி தண்ணீரை  மாத்திரமே கொண்டுள்ளது.இதேவேளை, புழுகுணாண, அடைச்சகல் போன்ற குளங்களும் பெருமளவில் வற்றிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த குளப்பிரதேசங்கள் வரட்சி காரணமாக பெரிதும் வரண்டு காணப்படுவதுடன் வயல் நிலங்களும் வரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment