September 28, 2015

விடுமுறை வழங்கப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இன்று கற்கை ஆரம்பம் !

யாழ்.பல்கலைக்கழகத்தின் விடுமுறை வழங்கப்பட்ட கலைப்பீட மாணவர்களுக்கான கற்கைகள், இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த 10ஆம் திகதி பாடசாலையில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டது.
குறித்த மாணவர்களுக்கே இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மோதலுடன் தொடர்புடைய மாணவர்களை கைதுசெய்யுமாறு யாழ்.நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment