September 29, 2015

ஐ.நா. பொதுச்சபை செயலமர்வில் இலங்கையிலிருந்து சிவில் அமைப்பு பிரதிநிதிகளின் உரை (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமைக் காரியாலயத்தில் கடந்த 22 ஆம் ,23 ஆம் திகதிகளில் நடைபெற்ற செயலமர்வில் இலங்கை மக்களின் அபிவிருத்தி, மலையக மக்களின்
அபிவிருத்தி நியமங்கள், ஆசிய நாடுகளின் தொழிலாளர் அபிவிருத்தி நியமங்கள், இலக்குகள் தொடர்பாக “நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி மற்றும் மிலேனியம் தொலை நோக்குகள்” எனும் தொனிப்பெருளில் மனித அபிவிருத்தித் தாபனத்தின் தலைவரும் சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமாகிய திரு.பீ.பீ.சிவப்பிரகாசம் மற்றும் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளரும் ஆசிய கிராமிய பெண்கள் வலையமைப்பின் செயற்குழு உறுப்பினருமாகிய திருமதி பீ.லோகேஸ்வரி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பெருந்தோட்ட மக்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள், முன்பள்ளி ஆசிரியர்கள், சிறுவர், பெண்கள் உரிமைகள், பொருளாதாரம் போன்ற விடயங்கள் சம்பந்தமாக அப்பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதை இப் படத்தில் காணலாம்.




No comments:

Post a Comment