September 24, 2015

, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜெனீவாவுக்கு பயணம்!

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் கவிந்திரன்
கோடீஸ்வரனும் இன்று இரவு ஜெனீவாவுக்கு பயணமாகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தான் ஜெனீவா செல்வதாக கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார். 

No comments:

Post a Comment