கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட
நுழைவாயில் திறப்பு விழா (28) திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும்நிகழ்வுகல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் இடம் பெற்றது.
நுழைவாயில் திறப்பு விழா (28) திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும்நிகழ்வுகல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் இடம் பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டநவீன நுழைவாயிலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவஅதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் சிறப்பு அதிதிகளாகவும் முன்னாள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீவன் மத்தியு ஆகியோர்சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment