September 29, 2015

ஓவியர் புகழேந்தி எழுதிய பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் மும்பையில் வெளியிடப்பட்டுள்ளது!

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆளுமைகளை எடுத்தியம்பும் ஓவியர் புகழேந்தி எழுதிய '' பிரபாகரன் பன்முக ஆளுமை "  நூல் வெளியீட்டு விழா மும்பையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இவ்வெளியீட்டு விழாவானது, மும்பை முத்தமிழ் மன்றம் சார்பில், செம்பூர் காமராசர் சாலை, காமராசர் அரங்கில் நடைபெற்றுள்ளது.
இதில் மாவீரன் தியாகி திலீபன் நினைவேந்தல் மற்றும், ஓவியர் புகழேந்தி எழுதிய தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
நவிமும்பை தமிழ்ச்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழா நிறைவில், நூலாசிரியர் ஓவியர் கு. புகழேந்தி ஏற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள், தமிழர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment