September 5, 2015

மட்டக்களப்பு மியான்கல் குளக்கட்டு விடயம் தொடர்பாக துரைராசசிங்கம் கள விஜயம் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மியான்கல் குளக்கட்டு விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய
கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கள விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் அங்குள்ள மீனவர்களுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு மாரி மழைகாலங்களிலும் இக்குளத்தின் குளக்கட்டு சேதப்படுவது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு பொது மக்களால் தெரியப்படுத்தப்பட்டு அதன் திருத்த வேலைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைப் பர்வையிடுவதற்காகவே மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் அமைச்சர் அவ்வடத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இது தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.





No comments:

Post a Comment