August 6, 2015

தேர்தலில் வெற்றிபெற தன்மீதே தாக்குதல் தொடுக்க திட்டமிடும் மகிந்த – புலனாய்வு பிரிவினர் உசார் நிலையில்!

குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரச்சார மேடைக்கு அருகில், புலனாய்வு அதிகாரிகளை நிறுத்த பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில், மக்கள் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ச மீது பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதனை முறியடிக்கும் நோக்கில் பல புலனாய்வு அதிகாரிகள் பிரச்சாரம் இடம்பெறும் இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மஹிந்த மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதனை கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் உறுதியாகியுள்ளன.
குறிப்பாக மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அனைத்து மேடைகளிலும் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment