May 27, 2015

மாணவி வித்தியா படுகொலை: கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசலையில் அஞ்சலி!(படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கல்முனை வலயம் தமிழ்கோட்டத்திற்கு உட்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசலையில் இன்று வித்தியாவிற்கு ஆத்ம சாந்திவேண்டி
அவருக்கான அஞ்சலி நிகழ்வானது இன்று கல்முனை கார்மேல் பற்றிமா சிசிலியா மேரி அரங்கில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை
விறையினர் செலர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்முனை வலயத்தின் தமிழ்ப்பாடப்பிரிவிற்கான உதவிக்கல்வி பணிப்பாளர் வரதராஜன், மற்றும் மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி
ஜெனிற்றா பிரதீபன் மற்றும் கல்லூரியின் பிரதி முதல்வர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு மாணவி வித்தியாவின் படத்திற்கு மலர் அஞ்சலி தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதம அதிதிகளினால் உரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment