April 11, 2015

மீண்டும் விடுதலைப் புலிகளையும் விசாரணைக்குட்படுத்துவதென்பது இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கவே!

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலி களையும் விசாரிக்கவேண்டும். எனக்கோருவது சட்டத்திற்கு மாறான ஒரு விடயமாகும். எனப்பதுட ன் அது இயற்கை நீதிக்கும் முரணான விடயமாகும்.பதிவு இணைய செய்தி
இறுதி யுத்தத்தினில் புலிப்போராளிகளும்; புலிகளென பொதுமக்களும் விசாரணைகள் ஏதுமின்றி கொலை செய்யப்பட்டிருந்தது அம்பலமானதொன்றே . சரணடைந்த போராளிகளும் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டோ சிறைகளினில் அடைக்கப்பட்டோ இருந்தனர்.பதிவு இணைய செய்தி

இந்நிலையினில் ஒரு குற்றத்திற்காக ஒரு தடவைக்குமேல் ஒருவர் தண்டிக்கப்பட முடியாது. என்பதே சட்டமாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் போராளிகளை போருக்குப் பின்னர் கைது செய்து சட்ட நட வடிக்கைகளுக்குட்படுத்தியும், கொலை செய்தும், புனர்வாழ்வுக்குட்படுத்தியும் உள்ள நிலையில் மீளவும் அவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் இயலாதென தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சமகால அரசியல் நில மைகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.பதிவு இணைய செய்தி

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழர் தாயகத்தில் இடம் பெற்ற இன அழிப்பு, போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உள்ளக விசாரணையினை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் உள்ளக விசாரணையில் போரில் ஈடுபட்டிருந்த, தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்க படைகள், துணை ஆயுதக் குழுக்கள் விசாரிக்கப்படவேண்டுமென ஒரு தரப்பு இப்போது பேச ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் இவ்வாறான உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப்;புலிகளை விசாரணைக்குட்படுத்த முடியாது. விடுதலைப்புலிகளின் போராளிகள்,போர் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலைப்புலிகள் என்பதற்காக கைகள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளுடன் கூடிய வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ் வுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள், பலர் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கைக்குள்ளாகியிருக்கின்றார்கள், நீண்டகாலத்திற்கு முன்னர் போர hளிகளாக இருந்தவர்களுக்கும் இந்த நிலையே. எனவே சட்டத்தின் படி ஒரு குற்றத்திற்காக ஒரு தடவை மட்டுமே ஒருவர் தண்டிக்கப்படவோ, விசாரிக்கப்படவோ முடியும். எனவே புலிகளின் போராளிகள் முன்னதாகவே தண்டிக்கப்பட்டுள்ளார்கள்,விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே மீண்டும் அவர்களை விசாரிக்கவோ, தண்டிக்கவோ முடியாது. எனினும் தண்டிக்கப்படாமலும், விசாரிக்கப்படாமலும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சில முன்னாள் முக்கிய தளபதிகளே இருக்கின்றார்கள். எனவே ஏறறகனவே தண்டிக்கப்பட்டும், விசாரிக்கப்பட்டும், சித்திரவதை, துன்புறுத்தல்களுக்குள்ளாகியிருப்போரை,மீண்டும் விசாரிப்பது மற்றும் தண்டிப்பது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கிறோம்.பதிவு இணைய செய்தி

இந்நிலையில் இவ்வாறு இருதரப்பும் விசாரிக்கப்படவேண்டும். எனக்கோருபவர்கள் முன்வைக்கும் நியாயம் என்னவென்றால் இரு தரப்பும் விசாரிக்கப்பட்டாலே நல்லிணக்கம் உருவாகுமென்பதாகும். ஆனால் இந்த நியாயம் இனப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். மேலும் அவ்வாறான நியாகத்தைக்கோரும் தரப்புக்கள் உன்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஒரு விசாரணைக் குழுவினை நியமிக்க உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதே எமது நிலைப்பாடு.பதிவு இணைய செய்தி

உன்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டுமானால் முதலில் இனப்படுகொலை குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்டிக்கப்படாமல் அது சாத்தியமற்றதாகும். ஐ.நா சபையே குறிப்பிடுகின்றது. இனப்படு கொலை உள்ளிட்ட பல மாபெரும் குற்றங்கள்,இடம்பெற்ற பகுதிகளில் சர்வதேச விசாரணை மூலம் தண்டணை வழங்கப்படாமல் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான விசாரணை குழு சாத்தியமற்றதென்று.

எனவே நாம் குறிப்பிடுவது நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னதாகவே தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிக்கவும், தண்டிக்கவும் முடியாது எனவும் அவர் விபரித்தார்.பதிவு இணைய செய்தி

No comments:

Post a Comment