April 10, 2015

மாமனிதர்.இரா.நாகலிங்கம் விருது!

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உதித்த தமிழ்க் கல்வி மேம்பாட்டு வளர்ச்சியில்,யேர்மனிய நாட்டில் தமிழாலயங்களுக்கு மத்தியிலான தமிழ்த் திறன் போட்டியை ஆரம்பித்து செயல் வடிவம் கொடுத்து அயராது உழைத்து  அண்மையில் சாவடைந்த மாமனிதர். இரா. நாகலிங்கம் அவர்களின் நினைவு  சுமந்து இனிவரும் காலங்களில் நாடு தழுவிய வகையில் நடைபெறும் தமிழ்த்திறன் போட்டியில் முதலாம் இடம் பெறும் தமிழாலயத்திற்கு மாமனிதர். இரா.நாகலிங்கம் விருது வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளது.
 
இச் சிறப்பு விருதிற்கான அனைத்து ஏற்புடைய ஒழுங்கமைப்புக்களையும் துறைசார்ந்தோரின் ஆதரவுடன் யேர்மன் தமிழ்க் கல்விக்கழகம் முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment