February 11, 2015

டென்மார்கில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கரபந்தாட்ட சுற்றுப் போட்டி.!


டென்மார்க் தமிழர் விளையாட்டுத் துறையினரால் Horsens நகரில் 07-02-2015 அன்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக கரபந்தாட்ட சுற்றுப்போட்டி

நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை, சோதியா படையணியின் சிறப்பு தளபதி மாவீரர் லெப் கேணல் சுகந்திர அவர்களின் சகோதரன் ஜெயபாலன் அவர்கள் ஏற்றிவைத்தார், அதனை தொடர்ந்து கரபந்தாட்டத்தில் பங்கேற்ற அணிகளின் தலைவர்கள் மலர் வணக்கத்திளை செலுத்திக்கொண்டார்கள் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாயின.

சுற்றுப் போட்டியில் 15 கழகங்கள் பங்கேற்று மிகவும் விறுவிறுப்பாக களம் இறக்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்கள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற அணிகள்
1ஆம் இடம் : நாம் தமிழர் அணி
2ஆம் இடம் : ஒல்போ அணி
3ஆம் இடம் : நியுபோ அணி
சிறந்த இளம் வியாட்டு வீரன் : நிகிலன்
சிறந்த விளையாட்டு வீரன் : ராஜ்

No comments:

Post a Comment