January 27, 2015

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரதியமைச்சர் திருமதி விஜயகலா !!

யாழ்.வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருக்கும் பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தினை தற்போது இடம்பெயர்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கும் அப்பகுதி மக்களுடன் இணைந்து பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் பார்வையிட்டிருக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு பிரதியமைச்சர் தலமையில் அப்பகுதி மக்கள் ஒருசிலரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு காலப்பகுதி வரையில் குறித்த ஆ லயத்தை பார்வையிடுவதற்கு அப்பகுதி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனபோதும் அதன் பின்னர் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 10வருடங்களுக்கு பின்னர் மக்கள் தங்கள் குலதெய்வம் ஆலயத்தை இன்றைய தினம் சென்று வழிபட்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த 25வருடங்களாக குறித்த ஆலயம் பராமரிக்கப்படமலிருக்கும், நிலையில் குறித்த ஆலயம் பற்றைகள் வளர்ந்து காடாக மாறியிருக்கின்றது.

மேலும் இன்றைய விஜயம் நாம் நமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படுவோம் என்னும் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment