February 15, 2015

கழிவு விவகாரம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய அமைப்பு இன்று தொடக்கம்!

சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட தூய குடி நீருக்கான பாதிக்கப்பட்டவாகள ஒன்றியம்
என்ற புதிய அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


சுன்னாகம் சிவன்கோவில் மண்டபத்தில் வைத்தியகலாநிதி ந.சிவசங்கர் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில புதிய அமைப்புக்கான நிர்வாகிகள் தெரிவும் இடம் பெற்றுள்ள.
தலைவர் க.நந்தரூபன், செயலாளர் சி.சிவமைந்தன், உப தலைவர் சி.ரமேஸ், பொருளாளர் சி.ரஜிந்தன் மற்றும் பிரதேசம் சார்ந்த உறுப்பினர்களாக ந.தவஜோதிநாதன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ச.சசிந்தன், எம்.முருகதாஸ், திருமதி சிவாஜினி சுரேஸ்குமார், சி.புருசோத்தமன், கே.கணேசமூர்த்தி, சி.கஜேந்திரா, ப.ரமணன் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment