November 27, 2014

யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளில் மாவீரர் தினப் பிரசுரங்கள்!

தமிழீழ மாவீரர் நாள் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்.குடாநாட்டிலுள்ள பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின
பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டின் சகல இடங்களிலும், படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் மாவீரர்களை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள், நேற்று அதிகாலையிலேயே போடப்பட்டிருந்தன.
பாடசாலைக்கு வந்த அதிபர், ஆசிரியர்கள் குறித்த பிரசுரங்களை மீட்டுள்ளதுடன், படையினருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
தமிழீழ மாவீரர் நாள் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்.குடாநாட்டிலுள்ள பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டின் சகல இடங்களிலும், படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் மாவீரர்களை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள், நேற்று அதிகாலையிலேயே போடப்பட்டிருந்தன. பாடசாலைக்கு வந்த அதிபர், ஆசிரியர்கள் குறித்த பிரசுரங்களை மீட்டுள்ளதுடன், படையினருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த பிரசுரங்களை மீட்ட படையினர் அவற்றை தாமே கொண்டு சென்றதுடன், பாடசாலைகளில் சோதனைகளை நடத்தியதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிகாலையில் குறித்த பிரசுரங்களை போட்டவர்கள் யார்? படையினரின் நடமாட்டம் மற்றும் சோதனைகள் அதிகமாகவுள்ள நிலையிலும் எவ்வாறு பிரசுரங்களை கொண்டு வந்தனர் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத நிலையில், நேற்று மதியம் தொடக்கம் யாழ் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு அருகிலும் படையினர் நிலைகொண்டுள்ளனர்.??????????????????????????????? ???????????????????????????????

No comments:

Post a Comment