May 27, 2014

பிரித்தானிய உயர்ஸ்தானிக முதற்செயலாளர் சிறீதரன் எம்.பியை அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடல்



இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் முதற்செயலாளர் டானியல் பெயின்ரர் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான மேலாளர் சஜனி ரணதுங்க ஆகியோர் பா.உறுப்பினர் சி.சிறீதரனை கிளிநொச்சி மாவட்ட கட்சி பணிமனை அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக குறிப்பாக இன்னமும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத கிராமங்கள் பற்றிய விடயங்கள் வட்டக்கச்சி பண்ணை ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி இரணைதீவு பரவிப்பாஞ்சான் பூநகரியின் பொன்னாவெளி பரந்தன் இராசாயன தொழிற்சாலை போன்றவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக டானியல் பெயின்ரருக்கு விரிவாக பா.உறுப்பினர் சி.சிறீதரனால் விளக்கமளிக்;கப்பட்டது.
மேலும் வடமாகாணசபையின் கீழ் உள்ள நிர்வாகங்களை நடத்துவதற்கு இருக்கக்கூடிய இடையூறுகள் வடக்கில் இடம்பெறும் கைதுகள் தொழில் வாய்ப்பின்மைகள் போன்ற விடயங்களும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு நோக்கிய முன்னெடுப்புகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

No comments:

Post a Comment