May 19, 2014

விடுதலைப் புலிகளின் உறுதி குறித்து வியந்துபோனேன் - பிரான்சிஸ் ஹரிசன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து விடக் கூடாது என்பதில் லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைமை ஒழுங்கமைப்பு உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரும், 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முக்கிய பங்கு வகித்தவருமான பிரான்சிஸ் ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். 

போராளிகள் இராணுவத்தில் சரணடைவதற்கு பதிலாக, சைனைட் குப்பிகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள நூல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளின் இந்த உறுதி குறித்து தாம் வியந்துபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment