April 24, 2014

மன்னார் முள்ளிக்குளமக்கள் தடைகளை நீக்ககோரி ஆர்ப்பாட்டம்!

மறிச்சுக்கட்டி முள்ளிக்குள மக்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை நீக்கக்கோரி மன்னாரில் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-மன்னார் சர்வமதப்
பேரவை அழைப்பு!
மன்னாரில் உள்ள மறிச்சிக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் கிராம மக்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை நீக்கக்கோரியும், இந்த மக்களின் காணிகளை அபகரிப்பவர்களுக்கு எதிராகவும் மன்னாரில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் சர்வமத இணைப்பாளர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
மன்னாரில் உள்ள மறிச்சிக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் கிராம மக்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை நீக்கக்கோரியும், இந்த மக்களின் காணிகளை அபகரிப்பவர்களுக்கு எதிராகவும் மன்னாரில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25.04.2014) காலை 9.00 மணிக்கு மன்னார் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இதில் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு மன்னார் சர்வமதப் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.மன்னார் ஆயர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மத அமைப்புக்களின் ஒத்துழைப்போடும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அன்றைய தினம் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை மன்னார் நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடி எமது முயற்சிக்கு ஆதரவு தருமாறு சகல இன மக்களையும் மன்னார் சர்வமதப் பேரவை வேண்டிக்கொள்கிறது.

No comments:

Post a Comment