August 16, 2016

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ள நீதியரசர் வீட்டில் மாடியில் இருந்து விழுந்து மரணம்!

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூ இரத்மலான அத்திட்டியவில் உள்ள தனது வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. சரத் ஆப்ரூவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாலியல் துஷ்பிரயோக வழக்கு நடந்து வருகிறது. வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment