August 16, 2016

உபாலி தென்னகோன் தாக்குதல் ; சந்தேகநபர்களை இனங்காண நாடு திரும்புகிறார்!

ரிவிர’ முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு மற்றும் குறிப்பிட்ட சந்தேகநபர்களை இனங்காண்பதற்காக தென்னகோன் விரைவில் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார்.


இந்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தென்னகோனின் வாக்குமூலம் தேவை என்பதோடு நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணியாளர்கள் சார்ஜண்ட் பிரேம் தயானந்த உதலாகமவிற்கு ரிவிர முன்னாள் எழுத்தாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக தற்பொழுது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்திட்டிய மளகல பாடசாலை முன்பாக விக்கிரமதுங்க கொலை சம்பவத்திற்கு பின்னர் அப்படியானால் 2008 ஜனவரி 23ம்திகதி கம்பஹா இம்புல்கொடயில் தென்னகோன் தாக்கப்பட்டுள்ளார்.

விக்கிரமதுங்க தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை 2009.12.12ம் திகதி பொலிஸ்மா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்திருந்தும் இந்த விசாரணை இடம்பெறவில்லை.

தனக்கு ஏற்பட்ட மிரட்டல் காரணமாக தென்னகோன் மற்றும் அவரது பாரியார் தங்களது பாதுகாப்பை கருதி ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்றுள்ளதுடன் இந்த ஆட்சி மாற்றத்தின் பின் இந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் தென்னகோன் வெளிநாடு சென்றுள்ளதால் அவரின் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முடியாமல் உள்ளது.

அதற்கமையவே அவரை நாட்டிற்கு அழைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.தென்னகோன் மற்றும் லசந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் பிரயோகித்திருக்கும் ஒரே ஐந்து தொலைபேசி என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் தென்னகோன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் அந்த சந்தேகநபர்களை இனங்காண முடியும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமையவே எதிர்வரும் 22ம்திகதி தென்னகோன் மற்றும் அவரது பாரியார் சந்தேகநபர்களை இனங்காண்பதற்கான அடையாள அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment