August 16, 2016

காணாமல் போனோரை தேடுவதற்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கவில்லை! கெஹெலிய ரம்புக்வெல்ல!

காணாமல் போனவர்களை கண்டறியும் செயலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக சட்டமூலத்தை கொண்டு வர சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டமூலத்தை கொண்டு வர சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்கவில்லை. இப்படியான சட்டமூலத்தை கொண்டு வர வேண்டும் என்று இலங்கை அரசே சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்தது.

போருக்குப் பின்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு என்ற வகையில் தனித்து பதில்களை தேட முடியாது என்பதால், உதவுமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் பிரதிபலனாக இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமது நாட்டில் நடந்தவற்றை தேடிக் கண்டுபிடிக்க முடியாத துன்பமாக இதனை கருத முடியும். மக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையில் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக 20 ஆயிரம் முறைப்பபாடுகள் உள்ளன.

எனினும் 65 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

காணாமல் போன 400 முதல் 500 வரையான தமது உறுப்பினர்களை கண்டறியவே தாம் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும் சட்டமூலத்தில் அண்மைய காலத்தில் நடந்த காணாமல் போன சம்பவங்கள் குறித்தே தேடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், 88ஆம், 89ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் மட்டுமல்லாது ரோஹன விஜேவீர குறித்தும் தேடி அறிய காலம் அவகாசம் கிடைக்காது.

அந்த சம்பவங்கள் குறித்து கண்டறியும் காலத்தில் நாம் எவரும் உயிருடன் இருக்க மாட்டோம் என கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment