August 16, 2016

செஞ்சோலைப் படுகொலை - 61 மாணவிகளுக்காக வள்ளிபுனத்தில் சிறப்பு வழிபாடு!

2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்த 61 மாணவிகள் விமானப்படையினரின் குண்டு வீச்சில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தப் படுகொலை நடந்த வள்ளிபுனம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று மதியம் 12.00 மணிக்கு சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

 
படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் பெற்றோர் உறவினர் நண்பர்கள் என பலர் கலந்து தீபமேற்றி ஆத்மசாந்திக்கான வழிபாடு செய்தனர். இந்த வழிபாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவும் கலந்து கொண்டார்.




No comments:

Post a Comment