July 6, 2016

வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன் – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி!

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் இந்தப் புதிய பதவியை ஏற்றுக் கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.


சிறிலங்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான எசல வீரக்கோன், தற்போது புதுடெல்லியில், சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய வருகிறார்.

இதனிடையே, தற்போது வெளிவிவகாரச் செயலராகப் பணியாற்றும் சித்ராங்கனி வகீஸ்வரா, புதுடெல்லியில் சிறிலங்கா தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment