July 6, 2016

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி கையெழுத்து போராட்டம்!

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரிக்கை முன்வைத்தும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும்  கையெழுத்து போராட்டம் ஒன்று முல்லைத்தீவு நகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.


சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்து வெளியேற வேண்டுமெனவும் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்தவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைிகளையும் விடுதலை செய்யுமாறு கோரியும் கையெழுத்துக்களை சேகரித்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களிலும் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment