July 21, 2016

கிளிநொச்சியில் மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிர லீற்றர் மதுபானம் நுகர்வு!

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த 2015 ஆண்டில் மாத்திரம் ஏழு இலட்சத்து பதின்மூவாயிரத்து 535 லீற்றர் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக மதுவரி நிலைய பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.பி குணரட்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து 359 லீற்றரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்து 176 லீற்றரும் நுகரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் ஒரு மதுபான நிலையமேனும் காணப்படாத நிலையில் அங்கு இரண்டு விடுதிகள் மாத்திரமே காணப்படுகின்றது. இதன் மூலமே குறித்தளவு மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு மதுபான நிலையமும், மூன்று விடுதிகளும் காணப்படுவதாகவும், இதன் மூலம் பியர் வகை மதுபானம் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்து 394 லீற்றரும், விஸ்கி மற்றும் பிரண்டி வகை மதுபானம் இரண்டாயிரத்து 575 லீற்றரும் ஏனைய மதுபான வகைகள் என எண்பத்தேழாயிரத்து 207லீற்றர் நுகரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment