July 30, 2016

ஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஒலுவில் கடற்கரைப் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள்  நேற்று ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒலுவில் கடற்கரைப்பகுதியில் இடம்பெறும் கடலரிப்பு காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்களின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாவதாகவும் இதன்போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சென்று உதவி பிரதேச செயலாளரிடம் மஹஜர் ஒன்றையும் கையளித்தனர்.

No comments:

Post a Comment