July 21, 2016

தாயகம் படைத்த தலைவரை துதிக்கும்..!

உடலம்
விதைத்த
உயர்நிலம்உயிர்க்கும்‬
நிறையும் 
ஆண்டேழு
நினைந்து பொறுமும்
தாயகம்
படைத்த
தலைவரை துதிக்கும்
ஈகம் 

விரும்பும்
ஈகியர் வணங்கும்
மழலையும்
கொன்றது
மானுடம் எதிர்க்கும்
மானம்
அழிந்தது
மனது உறுத்தும்
இனம்
வீழ்ந்தது
இன்றென விளங்கும்
நிகழும்
வழமை
நெஞ்சுரம் விஞ்சும்
பொங்கும்
குருதி
பேரினம் வெறுக்கும்
சீற்றம்
பெருகும்
சிங்களம் தூற்றும்
சிவக்கும்
இருவிழி
செயற்பாடு இகழும்
கலங்கும்
உள்ளம்
கடவுளர் தூற்றும்
வீரம்
சிறக்கும்
வீணர் சிதைக்கும்
உடலம்
விதைத்த
உயர்நிலம் உயிர்க்கும்
மாற்றம்
நிகழும்
மாயீழம் பிறக்கும்

No comments:

Post a Comment