July 30, 2016

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை கிளிநொச்சியில் சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்!

இன்று 29-07-2016 வெள்ளி நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் சிலரை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.


இவ்விசேட சந்திப்பில் அவர்கள் போக்குவரத்து மற்றும் சில வாழ்வாதார சவால்களை சந்திப்பதாகவும் அதற்கான தீர்வினை அமைச்சரிடம் கோரி மனு ஒன்றையும் வழங்கிவைத்தனர். அந்த வேளையில் அங்கு அவர்களுக்கு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவதாகவும் எதிர்காலத்தில் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.







No comments:

Post a Comment