June 7, 2016

பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி எம்.இளஞ்செழியன்!

2003 ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின்முதலாவது எதிரிக்கு
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்கியமை விசேட அம்சமாகும்.

குறிக்கப்பட்ட வழக்கில் இறந்துபோன சின்னலெப்பை அலாவுதீனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மனைவி கலந்தர் ரூபியாவை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தார்.

எனினும் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது எதிரியான செல்லத்துரைக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment