June 18, 2016

இலங்கை அகதி தற்கொலை அச்சுறுத்தல்- தீவிரநிலை தோன்றியது!

தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.


தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.

ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர்

எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தமது அறைக்கு விரைந்த தயாபரராஜா அறையின் கதவை தாழிட்டு தாம் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்தில் தீவிரநிலை தோன்றியது.

இதேவேளை தாம் விடுவிக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் கடும் முடிவு ஒன்றை எடுக்க நேரிடும் என்று தயாபராஜா முகாம் அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment