May 21, 2016

அனர்த்த பாதிப்பு- 11 மாவட்டங்களில் ஐ.நா மதிப்பீடு!

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள்
தீர்மானித்துள்ளன. இந்த மதிப்பீடு மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள 11 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை ஐ.நா வழங்கும் என்று நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment