September 17, 2015

முல்லைத்தீவில் மடிக்கணினியைத் திருடிய சிறுவன் கைது!

மடிக்கணணியைத் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரின் நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை இரவு சிறுவன் ஒருவனைக்  கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தண்ணீரூற்று கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முள்ளியவளை பொலிசில் கடந்த செவ்வாய்க் கிழமை முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளது. இதற்க்கமைய முள்ளியவளைப் பொலிசார் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் அரச உத்தியோகத்தர்கள் என்பதன் காரணத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. கைது செய்யபட்ட சிறுவனிடமிருந்து இருந்து மடிக்கணனியை கைப்பற்றிய பொலிசார் சம்மந்தப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment