September 17, 2015

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை படமெடுத்தவருக்கு நேர்ந்தகெதி!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரை மறைத்திருந்து கைத்தொலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ருவன் திஸா நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment