August 10, 2015

த.தே.கூட்டமைப்பினருக்கு எதிராக இனந்தெரியாதோரால் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கூட்டமைப்பினரை துரோகிகள் என
அடையாளப்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.நேற்று இரவு நெல்லியடி, மாலுசந்தி பகுதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதன்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தேசிய தலகவரின் மண்ணில் தேச துரோகியா என எழுதப்பட்ட பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.
எனினும் இந்த பிரசுரத்தை விநியோகித்தவர்கள் கண்டறியப்படாத நிலையில் கூட்டமைப்பின் கவனத்திற்கு குறித்த பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
notetna2notetna1

No comments:

Post a Comment