August 10, 2015

மட்டக்களப்பு மாவட்டச் செயலம் முன் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்பு இனந் தெரியாத ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாவியின் நீரோட்டம் காரணமாக கோட்டைக்கு முன்பாக நீரினுள் உள்ள பாரிய கல்லொன்றில் சடலம் தடைப்பட்டு இருந்ததாகவும் பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு எடுத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பின்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment