August 10, 2015

யுத்தத்தின் பின்னர் எவரும் பிரிவினையைக் கோரவில்லை!

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்க்கப்படுகின்றது. வேறு எந்த தமிழ் கட்சிகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க விரும்பவில்லை. எமது உடனடி தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய அவர் விரும்பவில்லை. அவருடன் பல தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.
இந்த பேச்சுக்களின்போது மஹிந்த எங்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டாரே தவிர தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கும், தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் எந்த நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை – என்றார்.

No comments:

Post a Comment