August 23, 2015

ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் – சீ.பி.ஐ!

ஈழத் தமிழரின் பிரச்சினைகளை தீர்க்க இந்திய மத்திய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கமியுனிச கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் முன்னாள் அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கப்படவில்லை.எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமும் போதிய அக்கறை காட்டவில்லை.

தற்போது தமிழ் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கையின் ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாகவும் பிரதமராகியுள்ளார். இந்த ஆட்சி மாற்றத்தை அடிப்படையாக கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையை வழங்கவும், கௌரவமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment