August 8, 2015

வரணிப் பகுதியைச் சேர்ந்த கணவனின் கள்ளக்காதலியைப் பிடித்த மனைவி.!

வரணிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளக்காதலியை தொழில்நுட்பத்தின் அறிவைக் கொண்டு பிடித்து அவளது வீட்டுக்குச் சென்று பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியுள்ளார்.

நெல்லியடிப் பகுதியில் உள்ள சாப்பாட்டுக் கடைஒன்றில் வேலை செய்யும் நபர் ஒருவர் திருமணமான 3 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து பின் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு தொடர்ந்து தபாரிப்புப் பணம் கட்டிக் கொண்டு இருக்கும் வேளையிலேயே வரணியைச் சேர்ந்த இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
அப்பெண்ணுக்கும் குழந்தையைக் கொடுத்த பின் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த ஒரு யுவதியை கள்ளக்காதலியாக வைத்திருந்துள்ளார்.
தனது கணவன் வீட்டுக்கு வரும் போது கைத் தொலைபேசியில் பற்றி சார்ச் இல்லாத நிலையில் வருவதால் இவர் யாருடன் அப்படி பற்றி குறையுமளவுக்கு கதைக்கின்றார் என சந்தேகம் கொண்டு கணவன் நித்திரையாகிய பின் அந்த கைத் தொலைபேசியின் சிம்மை தனது போனில் போட்டு ஆராய்ந்துள்ளார்.
அப்போது அதற்கு அழைப்பு ஒன்று வரவே அதில் யார் கதைப்பது என பார்த்த போது ஒரு பெண்ணே கதைத்துள்ளார்.
அதன் பின்னர் தனது கணவனின் தொலைபேசியில் அவருக்கே தெரியாது கதைப்பதை பதிவு செய்யும் மென்பொருளை இறக்கி வைத்துவிட்டார்.
அதன் பின்னர் கணவன் வீட்டுக்கு வரும் வேளையில் அதனை அவர் ஆராய்ந்து அந்த ஒலிப்பதிவில் இருந்த பெண்ணின் குரலை ஆராய்ந்த போது அந்தப் பெண்ணுக்கும் கணவருக்குமான கள்ளக் காதல் வெளியாகியுள்ளது,
பின்னர் அந்த இலக்கத்தை வைத்து வேறு ஒரு இலக்கத்தில் இருந்து தொடர்பு எடுத்து அப் பெண்ணின் விலாசத்தை அவளிடமே கேட்டு அங்கு சென்ற மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குறித்த பெண் கறுப்பான நிறமாகவும் வடிவில்லாமல் இருந்துள்ளாள். இருந்தும் அவளுடன் தனது கணவரைப் பற்றிக் கேட்டு சண்டையைத் தொடங்கினார்,
இதனையடுத்து அந்த இடத்திற்கு பதறியடித்து ஓடிவந்த கணவனைப் பார்த்து ‘எப்படியடா உனக்கு கரிக்கட்டை போல இருக்கிற இவளைக் கட்டிப்பிடிக்க மனம் வந்தது‘ என்று மிகவும் கேவலமான முறையில் ஏசிச் சண்டை பிடித்துள்ளார்,
பருத்திதுறை வீதியில் அமைந்துள்ள குறித்த பெண்ணின் வீட்டில் இவ்வாறு சண்டை நடந்த போது அப்பகுதியால் சென்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்து சிரித்துவிட்டுச் சென்றதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment