August 14, 2015

புலம்பெயர் தேசம் எல்லாம் பெருகி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு அலை!

எதிர்வரும் 17 ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் நாடுகளிலும் பெருகி வருகின்றது . புலம்பெயர் தமிழ் மக்கள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை கொடுத்து தாயகத்தில் ஒரு மாற்று அரசியல் தலைமையை கொண்டுவருவதுக்கான முயற்சியை முழுமையாக வேண்டிநிற்கின்றனர் .
கடந்த வாரங்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக சமகால அரசியல் மக்கள் கலந்துரையாடல்கள் , செயற்பாடுகள் , மக்கள் சந்திப்புகள் நடைபெற்றுவருகின்றது . இவ் ஆதரவு அலையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமக்கு ஆதரவான ஊடகங்களால் மழுங்கடிக்க செய்கின்ற அதேவேளை தமது தொடர்ச்சியான பொய்யான பிரச்சாரங்களை மக்களை ஏமாற்றும்வகையில் பரப்பிவருகின்றனர் .
தமிழ் மக்கள் இக் காலகட்டத்தில் விழிப்போடு செயற்பட்டு தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்த கூடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தெரிவு செய்வது தார்மீக கடமையாக இருக்கிறது .dcp2378676767676 (1)dcp2378676767676 (2)dcp2378676767676 (3)dcp2378676767676 (4)dcp2378676767676 (5)dcp2378676767676 (6)dcp2378676767676 (7)dcp2378676767676 (8)dcp2378676767676 (9)dcp2378676767676 (10)dcp2378676767676 (11)

No comments:

Post a Comment