August 12, 2015

நல்லாட்சியை விற்று வாக்குகளை பெறும் ஐக்கிய தேசிய கட்சி! மஹிந்த குற்றச்சாட்டு!

ஐக்கிய தேசிய கட்சி ஏனைய முறைகளை போன்று இம்முறையும் மக்களை மறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி, குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சியை விற்று வாக்குகளை பெற்று கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பொதுத் தேர்தலில் படுதோல்வியடையும் எனவும் முன்னணி 117ஆசனங்களை பெற்று கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்நாட்டிற்கு முறைகேடான வழியில் பிரதமராகினார் எனவும் இந்த விளையாட்டுகள் அனைத்தும் எதிர்வரும் 17ம் திகதியுடன் நிறைவடையும். இவை அனைத்தையும் மாற்றுவதற்கு மக்கள் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment