August 10, 2015

பிரான்ஸ் பாரிஸ் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினாருக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!

பிரான்ஸ் பாரிஸ் நகர் மற்றும் அந்த சுற்றியுள்ள புற நகரங்கள் எங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் கட்சிக்கு தாயகத்தில் நடைபெற இருக்கும்
தேர்தலில் வாக்களிக்கும் படி, தமது உறவுகளை தொடர்பு கொண்டு இந்தத் தேர்தலில் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இன்று தேர்தல் களத்தில் தமது பாராளுமன்ற இருப்புகளை காப்பாற்றிக்கொள்ள பல மேடைகளில் வழமை போல் மக்களிடம் பலவிதமான வாக்குறுதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழங்கிக்கொண்டு இருப்பதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள் – சம்பந்தன் பல மேடைகளில் விடுதலை போராளிகளை அவர்களின் போராட்டத்தை ஏலனப்படுத்தியத்தை நாம் அறிவோம் – ஆனால் இன்று தேர்தல் மேடைகளில் அவர்களின் பேச்சுக்கள் முன்னுக்கு பின் முரணானதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம்.
இந்த சூழலில் தாயகத் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் ஒரு தீர்கமான மாற்றத்தை உருவாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
அனைத்துலகம் எங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழீழ மக்களுக்கு அவர்கள் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்க தாயாக அரசியலிலும் ஒரு பாரிய மாற்றத்தை வேண்டி அந்த மாற்றத்துக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும் படி தாயக மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
 தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.
dcp52767676767676 (1)dcp52767676767676 (3)dcp52767676767676 (4)dcp52767676767676 (5)dcp52767676767676 (6)

No comments:

Post a Comment